Monday, March 24, 2014

அன்பும் பாசமும்

ஆபீஸ்ல இருந்து வீட்டுக்குள்ள வந்த உடனே, ஓடி வந்து பாசத்தோட கால கட்டி புடிச்ச ஆதவ ஆசையா அள்ளி அனைச்சு தூக்கினேன் ...

ஆதவ் :  அப்பா ஆபீஸ்ல இருந்து  என்ன வாங்கிட்டு வந்தப்பா ?

(இந்த bit போடறதுக்கு தான் அவ்ளோ பாசமா ஓடி வந்தியா... ??  
But நான் ஒன்னுமே வாங்கலையே ...  asusual எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்... )

அப்பா : அன்பும் பாசமும் வாங்கிட்டு வந்தேன் ஆதவன் ...

ஆதவ் :  இன்னாது.....????

அப்பா :  சரி கண்ண மூடு உனக்கு அப்பா அன்பும் பாசமும் தரேன் ...

( சிரிச்சிட்டே கண்ண மூடிகிட்டான் )

அவன் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டு
இது... அன்பு ,
இன்னொரு கன்னத்துல இன்னொரு முத்தம் கொடுத்துட்டு
இது... பாசம் .....

ஆதவ் கண்ண திறந்து, கைய பார்த்தான், அப்புறம் ரெண்டு கைய விரிச்சு காமிச்சு, பரிதாபமா மூஞ்ச வெச்சிகிட்டு,

ஆதவ் :  அப்பா எங்கப்பா அன்பும் , பாசமும்  காணும்???????

அப்பா :   !!!!!?????  அது இங்க தான் எங்கயாச்சும் போய் இருக்கும் தேடி பாருடா ..   உன்கிட்ட போய் sentimenta பேசினேன் பாரு .....    :( :( :( :(  

No comments:

Post a Comment