Wednesday, June 4, 2014

கண்ணாமூச்சி!!!


அப்பா :   1,2,3,4..... 10  ஜூட் ..

ஆதவ் எனக்கு பின்னாடியே முகத்த ஒரு towel போட்டு மூடிட்டு இருந்தான் ..

(ஒளிஞ்சுகிட்டு இருக்கானாமா ....)

நானும் அவன கண்டு புடிக்காத மாதிரியே ...

அப்பா :  ஆதவ் எங்க காணும் .. இங்க தான இருந்தான் ... கண்டே புடிக்க முடியலையே...

சொல்லிட்டே வேற எங்கயோ தேடிட்டு இருந்தேன்...

இதுல சத்தமா சிரிப்பு வேற அவனுக்கு  .  புத்திசாலிதனமா ஒளிஞ்சி இருக்கோன்னு பெருமைல சிரிக்கிறானா இல்ல லூசு மாதிரி நான் வேற எங்கயோ தேடிட்டு இருக்றத பார்த்து சிரிக்கிறானா தெரியல ...

அவன பார்க்காத மாதிரியே அவன cross பண்ணி போனேன் ..  அப்ப suddena towel எடுத்துட்டு

ஆதவ் :   பே .......  ..   அப்பா பயன்துடீங்களா ...   எப்படி பயமுறுதிட்டேன் பார்த்தீங்களா உங்கள ...

அப்பா :  நான்  பயப்படவே இல்லையே ... அப்பா என்னைக்கு டா பயந்து பார்த்து இருக்க .. (night  தான் நல்லா  தூங்கிடுவானே .. எப்படி பார்த்து இருப்பான்  :) )

ஆதவ் :  அப்பா நானும் பயப்படவே இல்லப்பா...

அப்பா :   டேய் நீ தான என்ன  பயமுறுத்துன அதுக்கு நீ ஏன்டா பயப்படனும் ? நான் தான பயப்படனும் ..

ஆதவ் :  நான் தான உங்கள பயமுறுத்துன அதனால தான்ப்பா  நான் பயப்படவே இல்ல....

அப்பா :  Right ... தெளிவா பேசுற .. பெரிய அரசியல்வாதியா வருவ டா  நீ